அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம்: ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் - டிடிவி தினகரன் அறிவிப்பு


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம்: ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் - டிடிவி தினகரன் அறிவிப்பு
x

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் நமது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுக்குழு கூட்டம், கழக துணைத்தலைவர் S. அன்பழகன் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் தலைமையில் வருகிற 06.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 08.30 மணிக்கு சென்னை, வானகரத்திலுள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அனைத்து கழக பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story