பொதுத் தேர்வு முடிவுகள்: கோவை மத்திய சிறையில் 100 சதவீத கைதிகள் தேர்ச்சி...!

கோவை மத்திய சிறையில் பொதுத் தேர்வு எழுதிய கைதிகள் அனைவரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
கோவை,
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்த நிலையில் கோவை மத்திய சிறையில உள்ள 33 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வும், 20 கைதிகள் பிளஸ் 2 தேர்வும் எழுதி இருந்தனர்.
இதில் பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து கைதிகளும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இதன் மூலம் கோவை மத்திய சிறைச்சாலையில் தேர்வு எழுதிய கைதிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





