தாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை


தாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை
x
தினத்தந்தி 26 Oct 2023 7:15 PM GMT (Updated: 26 Oct 2023 7:15 PM GMT)

தாய் திட்டியதால் விஷம் குடித்து சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்

வலங்கைமான்:-

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழுவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகள் லக்சனா சுருதி (வயது13). இவர் வலங்கைமானில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் அடிக்கடி செல்போன், டி.வி. பார்த்ததை தாய் கண்டித்து, திட்டி உள்ளார். இதனால் மன வேதனை அடைந்த லக்சனா சுருதி, சம்பவத்தன்று இரவு வயலுக்கு தெளிக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story