தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை


தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை
x

திண்டுக்கல் அருகே தூக்குப்போட்டு சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள மயிலாப்பூர் காலடிபட்டியை சேர்ந்தவர் முருகன் கூலித்தொழிலாளி. அவருடைய மகள் தேவிகா (வயது 16). கடந்த சில மாதங்களாக இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த தேவிகா, நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன், ஏட்டு கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் தேவிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story