மீஞ்சூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


மீஞ்சூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

மீஞ்சூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த தத்தைமஞ்சி கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேந்தவர் ஏழுமலை (வயது 50). இவரது மகள் சபரியம்மாள் (23). இவருக்கு காட்டூர் கிராமம் வாசகசாலை பகுதியில் வசிக்கும் ரஞ்சித்குமார் (28) என்பவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கணவர்- மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை அருகே உள்ள தேவாலயத்திற்கு அழைத்து செல்லுமாறு சபரியம்மாள் கணவரிடம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு மறுக்கவே மனமுடைந்த சபரியம்மாள் வீட்டின் அறைக்கு சென்று தாழ்பாள் போட்டு பூட்டி கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டார் அவரை மீட்டு பொன்னோரி அரசு அஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தந்தை காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் பொன்னேரி சப்-கலெக்டர் விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காட்டூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (42). இவர் கடந்த 5-ந் தேதி கனகம்மாசத்திரம் அடுத்த லட்சுமாபுரம் கிராமத்தில் தனது உறவினர் இறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பின்னர் வீடு திரும்புவதற்காக லட்சுமாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று பாபுவின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாபு தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பாபு பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பாபுவின் தாயார் முருகம்மாள் அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.


Next Story