சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவர் மீது வழக்கு


சிறுமி பாலியல் பலாத்காரம்; முதியவர் மீது வழக்கு
x

நாசரேத் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 60). தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீசார், தர்மராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story