ஆறுமுகநேரியில்மோட்டார் சைக்கிளில் சென்றுஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது


ஆறுமுகநேரியில்மோட்டார் சைக்கிளில் சென்றுஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 2 Aug 2023 6:45 PM GMT (Updated: 2 Aug 2023 6:46 PM GMT)

ஆறுமுகநேரியில்மோட்டார் சைக்கிளில் சென்று ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது ெசய்யப்பட்டனர்.

ஆடு திருட்டு

ஆறுமுகநேரி ராஜமன்னிய புரத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் மகன் சாந்தகுமார் (வயது 44). இவர் அப்பகுதியில் காய்கனி கடை நடத்தி வருகிறார். மேலும் இவர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல் ஆடுகள் அதே பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்பகுதிக்கு மோட்டார் ைசக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் திடீரென்று ஒரு ஆட்டை திருடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றி கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

அடையாளம் தெரிந்தது

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாந்தகுமார் உடனடியாக ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டியன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். இதில், ஆட்டை திருடி கொண்டு மோட்டார் ைசக்கிளில் தப்பி ெசன்றவர்கள் அடையாளம் தெரிந்தது.

2 பேர் கைது

இதை தொடர்ந்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆடுகளை திருடிய ஆறுமுகநேரி அருகேயுள்ள ரத்னாபுரி ராஜ் மகன் கார்த்திக் ராஜா(25), முத்தையா மகன் முத்துசாமி(26) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story