ஊத்தங்கரை அருகேமர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் செத்தன


ஊத்தங்கரை அருகேமர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2 Feb 2023 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்து 16 ஆடுகள் செத்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூலித்தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த எக்கூர் ஊராட்சி திருமணி வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 45). கூலித்தொழிலாளி. இவர் ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து 21 ஆடுகளை வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு கொட்டகைகளில் ஆடுகளை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டு பார்த்திபன் ஓடி வந்து பார்த்தபோது 16 ஆடுகள் ரத்தக்காயங்களுடன் செத்து கிடந்தன.

விசாரணை

மேலும் 5 ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தன. இதையடுத்து படுகாயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், கிராம நிர்வாக அலுவலர், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் மர்ம விலங்கு கடித்து ஆடுகள் செத்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கொட்டகையில் 16 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து செத்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story