அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:47 PM GMT)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே அத்தியூர் கிராமத்தில் வாரச்சந்தை நேற்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வளர்த்து வந்த ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இதையடுத்து சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

ரூ.1 கோடி

இதில் விழாவின் 3-வது நாளான கரிநாளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகள் விற்பனைக்காக அதிக அளவில ஆடுகளை சந்தைக்கு கொண்டு வந்தனர். இதன் மூலம் நேற்று ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது என்றார்.


Next Story