தங்க சங்கிலி மாயம்


தங்க சங்கிலி மாயம்
x

பெண்ணின் தங்க சங்கிலி மாயமானது

திருநெல்வேலி

நெல்லை டவுன் பெரிய தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி முத்தம்மாள் (வயது 53). இவர் அந்த பகுதியில் நடந்த கோவில் விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சங்கிலியை பறித்து சென்றனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story