துபாயில் இருந்து வந்த விமானத்தில் ரூ.47 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட் கடத்தல் - சென்னையை சேர்ந்த வாலிபர் கைது


துபாயில் இருந்து வந்த விமானத்தில் ரூ.47 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட் கடத்தல் - சென்னையை சேர்ந்த வாலிபர் கைது
x

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ. 47 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு சிக்ரெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த சென்னை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ.94 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றினர்.

பின்னர் தனியறைக்கு அழைத்து சென்றனர். அப்போது உள்ளாடை மற்றும் ஆசனவாய் பகுதிக்குள் தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 47 லட்சத்தி 41 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 83 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story