கார் மீது அரசு பஸ் மோதல்; தம்பதி படுகாயம்


கார் மீது அரசு பஸ் மோதல்; தம்பதி படுகாயம்
x

கார் மீது அரசு பஸ் மோதல்; தம்பதி படுகாயமடைந்தார்.

திருச்சி

கொள்ளிடம் டோல்கேட்:

ஸ்ரீரங்கம் பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார்(வயது 70). இவரது மனைவி லலிதா(65). இவர்கள் 2 பேரும் நேற்று காரில் முசிறிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணிகண்டன்(47) ஓட்டினார். மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே சேலம் நோக்கி வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ரமேஷ்குமார், லலிதா ஆகியோர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story