விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

கோபியில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோபி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஈரோடு

கடத்தூர்:

கோபியில் விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோபி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

நஷ்டஈடு

கோபி அருகே உள்ள தாழக்கொம்பு புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 60). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 23-8-2018 அன்று ஒத்தக்குதிரை பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், அவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் இறந்தார்.

விபத்தில் கிருஷ்ணன் இறந்ததால், ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனக்கோரி கிருஷ்ணன் குடும்பத்தினர் கோபி 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 25-10-2018 அன்று வழக்கு தொடர்ந்தனர். வழக்கை நீதிபதி ஜெகநாதன் விசாரித்து கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்து 97 ஆயிரத்தை வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கு கடந்த 21-10-2020 அன்று உத்தரவிட்டார். ஆனால் நஷ்டஈடு வழங்கப்படவில்லை.

ஜப்தி

இதனால் கடந்த 25-4-2021 அன்று கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதி ஜெகநாதன் விசாரித்து நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஒன்றை ஜப்தி செய்ய கடந்த 13-4-2022 அன்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோபி பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காக நின்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்றை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

இந்த சம்பவத்தால் கோபி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story