கடலூரில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு நகர பேருந்துகள் 3-வது நாளாக நிறுத்தம்.!


கடலூரில் கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு நகர பேருந்துகள் 3-வது நாளாக நிறுத்தம்.!
x

அனைத்து அரசு பேருந்துகளையும் இரவில் பணிமனையில் நிறுத்த நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.

கடலூர்,

நெய்வேலியில் நேற்று முன் தினம் நடைபெற்ற போராட்டம் வன்முறையானதை தொடர்ந்து, கடலூரின் பல பகுதிகளில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 25க்கும் மேற்பட்ட பேருந்துகளின் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், கடலூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் 3-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு பேருந்துகளையும் இரவில் பணிமனையில் நிறுத்த நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.


Next Story