அரசு டாக்டர் ஆஜராகி சாட்சியம்


அரசு டாக்டர் ஆஜராகி சாட்சியம்
x

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் அரசு டாக்டர் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

மதுரை

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020-ம் ஆண்டில் போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. வழக்குபதிவு செய்தது. இந்த வழக்கில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதி நாகலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்வதற்காக அமைத்த 3 டாக்டர்கள் கொண்ட குழுவில் இருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் செல்வமுருகன் நேற்று கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கு வருகிற 16-;ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

டாக்டர் சாட்சியம் அளித்தபோது, ஜெயராஜ், பென்னிக்சின் உடல்களில் எத்தனை காயங்கள் இருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நீதிபதி முன்பு கூறினார் என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.


Related Tags :
Next Story