அரசு பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா


அரசு பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா
x

கடவூர் வட்டார அளவில் அரசு பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், தரகம்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கடவூர் வட்டார அளவிலான அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு இடையேயான கலைத் திருவிழா 3 நாட்கள் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகவள்ளி தலைமை தாங்கினார். இதில் உதவி திட்ட அலுவலர் சக்திவேல் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் தரகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வேதவள்ளி செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரபாகர், வட்டார கல்வி அலுவலர்கள் தர்மராஜ், செந்தமிழ் செல்வி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் வரதராஜ், வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களை பாராட்டினார். 3 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் கடவூர் வட்டார அளவில் 48 பள்ளிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர். இந்த கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடவூர் வட்டாரத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story