அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும்


அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 1 Oct 2022 12:15 AM IST (Updated: 1 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு துரை ரவிக்குமார் எம்.பி. அறிவுரை கூறினார்

விழுப்புரம்

விழுப்புரம்

கண்காணிப்பு குழுக்கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான துரை ரவிக்குமார் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் மோகன், எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டம், ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரியின் கிராமச்சாலைகள் திட்டம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம், தேசிய பயிர் பாதுகாப்பு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் துரை ரவிக்குமார் எம்.பி. கேட்டறிந்தார்.

அறிவுரை

அப்போது அவர் கூறுகையில், செயல்படுத்தப்படும் ஒவ்வொரு திட்டமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தக்கூடிய திட்டம் என்பதால் குறிப்பிட்ட காலத்திற்குள் மக்களை சென்றடையும் வகையில் செயலாற்றிட வேண்டும். அரசு திட்டங்களை கொண்டு வருவதுடன் அதே வேகத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசுத்துறை அலுவலர்களுக்கு பெரும் பங்கு உண்டு. அதை உரிய காலத்தில் சேர்த்திட அலுவலர்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ஷீலாதேவி சேரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காஞ்சனா, கூட்டுறவு இணைப்பதிவாளர் யசோதாதேவி, விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் கலைச்செல்வி, வாசன், சச்சிதானந்தம், யோகேஸ்வரி, தனலட்சுமி, உஷா, சங்கீதாஅரசி, ஓம்சிவசக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story