கவர்னரின் போக்கு முற்றிலும் சரியில்லை- அமைச்சர் துரைமுருகன் காட்டம்


கவர்னரின் போக்கு முற்றிலும் சரியில்லை- அமைச்சர் துரைமுருகன் காட்டம்
x

கர்நாடகாவில் இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண் பிடித்தது இல்லை. ஏதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல கர்நாடகா நினைக்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் சாடினார்.

வேலூர்,

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெரிய பொறுப்பில் இருப்பவர்களே சட்டதை மதிக்க மாட்டோம் என்று சொன்னால், சாதாரண பொதுமக்கள் எப்படி சட்டத்திற்கு பணிவார்கள். கவர்னரின் போக்கு முற்றிலும் சரியில்லை. ஆனால் இந்த விளையாட்டை மத்திய அரசு, பிரதமர் மற்றும் உள்துறை மந்திரி வேடிக்கை பார்ப்பது சரியல்ல'' என்றார்.

தொடர்ந்து காவிரி விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், கர்நாடகாவில் இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண் பிடித்தது இல்லை. எதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல நினைக்கிறார்கள். அல்லது ஏதோ ஒரு சலுகை கேட்கிறோம் என நினைக்கிறார்கள். அதுவும் அல்ல.. இந்த நாட்டின் உச்ச நீதிமன்றம், அது விதித்த விதிப்படிதான் நாட்டு மக்கள் நடக்க வேண்டும். ஆனால், ஒரு அரசாங்கமே நடக்கமாட்டேன் என்று சொல்வது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல" என்றார்.


Next Story