தார் சாலை தரமின்றி இருப்பதாக தவறான கருத்து அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை


தார் சாலை தரமின்றி இருப்பதாக தவறான கருத்து அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
x

சமூக வலைதளங்களில் தார் சாலை தரமின்றி இருப்பதாக தவறான கருத்து, என்றும் அரசு பொது சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கூறினார்.

கரூர்

தார் சாலை

கரூர் மாவட்டம், வீரசிங்கம்பட்டியில் தார்சாலையை கலெக்டர் பிரபுசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை உள்ள தார்சாலையை புனரமைத்தல் பணி மேற்கொள்ள செயல்முறைகளில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த விலைப்புள்ளி அளித்த நிறுவனத்திற்கு செயல்முறைகளின்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டது.

பிரச்சினை

இந்த வேலை உத்தரவு வழங்கப்பட்டதை தொடர்ந்து பேட்ச் ஒர்க் முடித்து கடந்த 6-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை 1,050 மீட்டர் மட்டும் தார்சாலை போடப்பட்டது. தார்சாலை போடப்பட்டு முழுமையாக செட் ஆவதற்கு 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகக்கூடிய சூழ்நிலையில், வீரசிங்கம்பட்டி குக்கிராமத்தில் இறுதியாக தார்சாலை மாலை 6 மணிக்கு முடிக்கப்பட்ட இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தார்சாலையை சேதப்படுத்தியுள்ளனர்.இரண்டு ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் தவறான வீடியோக்களை பதிவிட்டு உண்மைக்கு புறம்பான அதாவது தார்சாலை தரம் இன்றி இருப்பதாக தவறான கருத்துக்களை பரப்பி மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தினர்.

நடவடிக்கை

சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்திட போடப்பட்ட சாலையில் சேதப்படுத்திய இடத்திற்கு அருகில், நீளம் + அகலம் 10 சென்டி மீட்டர் + 10 சென்டி மீட்டர் மற்றும் ஆழம் 3.0 சென்டி மீட்டர் என்ற அளவில் வெட்டி எடுக்கப்பட்ட போது ஆழம் 3.5 சென்டி மீட்டர் இருப்பது தெரியவந்தது. இதன்படி கூடுதலாக தார்சாலையின் கனம் 0.5 சென்டி மீட்டர் இருந்தது தெரியவந்தது.

வெட்டி எடுக்கப்பட்ட தார்சாலையின் மூலப்பொருட்கள் (தார் மற்றும் ஜல்லி) வெட்டி எடுத்து பயன்படுத்தப்பட்ட தாரின் அளவு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டதில் 5.4 சதவீதம் தார் இருக்க வேண்டிய இடத்தில் 5.5 சதவீதம் இருந்தது ஆய்வில் தெரியவந்தது. இச்சாலையின் தரம் மேற்படி மூலப்பொருட்கள் தர ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்படையில், சாலை தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது போலீசார்மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story