மொபட் மீது லாரி மோதியதில் தாத்தா, பேரன் பலி


மொபட் மீது லாரி மோதியதில் தாத்தா, பேரன் பலி
x

கரூர் அருகே மொபட் மீது லாரி மோதியதில் தாத்தா, பேரன் பரிதாபமாக இறந்தனர்.

கரூர்

லாரி மோதல்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பெத்தான்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 80). இவரது பேரன் கார்த்தி (14). நேற்று காலை ஒரு மொபட்டில் கார்த்தி தனது தாத்தா வெங்கடாசலத்தை அழைத்து கொண்டு திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தான்கோட்டை பிரிவு அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பவுடர் கொண்டு சென்ற டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக கார்த்தி, வெங்கடாசலம் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியது.

தாத்தா-பேரன் பலி

இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கார்த்தி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக இறந்தார்.

பின்னர் போலீசார் வெங்கடாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்குப்பதிவு

இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கார்த்தி திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்து விட்டு தற்போது 10-ம் வகுப்பிற்கு செல்ல இருந்தார்.

பள்ளி விடுமுறைக்காக தாத்தா வீட்டிற்கு வந்த கார்த்தி விபத்தில் சிக்கி இறந்தது தெரியவந்துள்ளது. சாலை விபத்தில் தாத்தா, பேரன் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story