மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x

சேலம் சண்முகநகரில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம்

அன்னதானப்பட்டி:

சேலம் லைன்மேடு, புது திருச்சி கிளை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மனைவி சரோஜா (வயது 65). இவர் நேற்று காலை தாதகாப்பட்டி சண்முக நகர் பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் பகுதியில் சாலையை கடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சரோஜா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே சரோஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். சரோஜா மீது மோதிய மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு அதனை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட அவர், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்றவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story