குறைதீர்க்கும் நாள் கூட்டம்


குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 8 May 2023 6:45 PM GMT (Updated: 8 May 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது இதில் 300 மனுக்கள் பெறப்பட்டது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித்தொகைகோரி புகார் தொடர்பான மனுக்கள் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, வங்கிகடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் அடிப்படை வசதி கோரி என மொத்தம் 300 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக மயிலாடுதுறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்து 870 மதிப்பில் விலையில்லா தையல் எந்திரங்களையும், அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகள் திலகவதிக்கு சேரவேண்டிய காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையினையும், கலெக்டர் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி, உதவி கலெக்டர்கள் யுரேகா, அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story