போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்


போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
x

நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் கமிஷனர் அனிதா (தலைமையிடம்) முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

அதே போல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற ஆவணக்காப்பகம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.


Next Story