அரியலூரில் 27-ந்தேதி விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்


அரியலூரில் 27-ந்தேதி விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்
x

விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் அரியலூரில் 27-ந்தேதி நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாத விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் வருகிற 27-ந்தேதி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறுகிறது. காலை 10.30 மணியளவில் தொடங்கும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இதில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story