100 நாள் வேலை குறித்து குறைகள்-புகார்களை தெரிவிக்கலாம்


100 நாள் வேலை குறித்து குறைகள்-புகார்களை தெரிவிக்கலாம்
x

100 நாள் வேலை குறித்து குறைகள்-புகார்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (100 நாள் வேலை) 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்தவதற்கும், அச்சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறை தீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுவதில் ஏதேனும் குறைகள், புகார்கள் இருந்தால் பெரம்பலூர் மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜானகிராமனை 8925811319 என்ற செல்போன் எண்ணிலும், ombudsnregsperambalur@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Next Story