சேலம் அருகேமளிகை கடையில் தீ; பொருட்கள் எரிந்து சேதம்


சேலம் அருகேமளிகை கடையில் தீ; பொருட்கள் எரிந்து சேதம்
x

சேலம் அருகே மளிகை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

சேலம்

சேலம்,

சேலம் அருகே உள்ள மன்னார்பாளையம் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் 1½ மணி நேரம் போராடி மளிகை கடையில் எரிந்த தீயை அணைத்தனர். இதில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story