ஆம்புலன்சில் 'குவா குவா'

சோளிங்கர் அருகே ஆம்புலன்சில் குழந்தை பிறந்தது.
சோளிங்கரை அடுத்த கீழாண்ட மோட்டூரை சேர்ந்த கூலித் தொழிலாளி கோபால் (வயது 38). நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி லதா (29) பிரசவ வலியால் சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் மருத்துவமனைக்கு பிரசவத்திற்ககாக கொண்டு சென்றனர். ஜம்புகுளம் அருகே சென்ற போது பிரசவவலி அதிகமாக இருந்ததால் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்தி மருத்துவ உதவியாளர் பொன்னுரங்கன் பிரசவம் பார்த்தார். லதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் தாய், சேய் இருவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





