இளம்பெண்ணை கட்டிப்பிடித்த காவலாளி கைது


இளம்பெண்ணை கட்டிப்பிடித்த காவலாளி கைது
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:47 PM GMT)

குழந்தைக்கு சாக்லெட் கொடுப்பதுபோல், இளம்பெண்ணை கட்டிப்பிடித்த 63 வயது காவலாளி கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவை,

குழந்தைக்கு சாக்லெட் கொடுப்பதுபோல், இளம்பெண்ணை கட்டிப்பிடித்த 63 வயது காவலாளி கைது செய்யப்பட்டார்.

இளம்பெண்ணை கட்டிப்பிடித்தார்

கோவை குனியமுத்தூரை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இளம்பெண் தனது வீட்டு முன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது இவரது வீட்டின் அருகே வசிக்கும் காவலாளி சுரேஷ்குமார் (வயது 63) என்பவர் அங்கு வந்தார். அவர் இளம்பெண்ணின் குழந்தைக்கு சாக்லெட் கொடுப்பது போல அருகே சென்றார்.

அப்போது சுரேஷ்குமார் திடீரென இளம்பெண்ணை கட்டிப்பிடித்து தவறாக நடக்க முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த இளம் பெண் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் காவலாளி அங்கிருந்து தப்பிச் சென்றார்.

காவலாளி கைது

இது குறித்து இளம்பெண் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் குழந்தைகள் சாக்லெட் கொடுப்பது போல நடித்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சுரேஷ்குமார் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் தலைமறைவாக இருந்த காவலாளி சுரேஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

----


Next Story