விஷம் குடித்து காவலாளி தற்கொலை


விஷம் குடித்து காவலாளி தற்கொலை
x

பாளையங்கோட்டையில் விஷம் குடித்து காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. 'ஏ' காலனி ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 47). காவலாளியான இவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜூ நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜூ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story