ரெயிலில் அடிபட்டு காவலாளி சாவு


ரெயிலில் அடிபட்டு காவலாளி சாவு
x

பழனி அருகே ரெயிலில் அடிபட்டு காவலாளி பலியானார்.

திண்டுக்கல்

பழனி அருகே சின்னக்கலையம்புத்தூர் ரெயில் தண்டவாளத்தில் அடிபட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக பழனி ரெயில்வே போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அதையடுத்து இறந்தவரின் சட்டைப்பையில் இருந்த ஆதார் அட்டையை வைத்து விசாரணை நடத்தியதில், அவர் சின்னக்கலையம்புத்தூர் பகுதியை சேர்ந்த காவலாளி ரவிச்சந்திரன் (வயது 42) என்பதும், தண்டவாளத்தை கடந்தபோது மதுரையில் இருந்து பழனி வழியே கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story