மின்சாரம் தாக்கி காவலாளி பலி


மின்சாரம் தாக்கி காவலாளி பலி
x

மின்சாரம் தாக்கி காவலாளி பலியானார்.

திருநெல்வேலி

மானூர்:

மானூர் அருகே சேதுராயன்புதூரில் இருந்து வல்லவன்கோட்டை செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு வல்லவன் கோட்டையைச் சேர்ந்த சவுந்தரராஜன் (வயது 62) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று தோட்டத்தின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் பகுதியில் சவுந்தரராஜன் இறந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரது மகன் கிறிஸ்டோபருக்கு தகவல் தெரிவித்தனர். அவர், தனது தந்தை மின்சாரம் தாக்கி இறந்ததாக கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சவுந்தரராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story