குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா


குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
x

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

வேலூர்

குடியாத்தம்

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு குடியாத்தம் அரசினர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளிக்கு இருக்கைகள் வழங்குதல் மற்றும் முன்னாள் மாணவர் சங்கமம் என முப்பெரும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் எம்.கீதா தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர்கள் நவீன்சங்கர், சுமதிமகாலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் ம.மனோஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து அவருடைய சாதனைகளை பேசினார்கள். மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாணவர்களுக்கு தேவையான 30 செட் இருக்கைகள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் டி.சங்கர் நன்றி கூறினார்.



Next Story