தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 40), கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு கனகா என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக பழனி சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கொத்தூர் அருகே சாமகவுண்டனூர் பகுதியை சேர்ந்த சக்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு பழனி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் அங்கு சென்று பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story