மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து 2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்: 10 பேர் மீது வழக்கு


மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து  2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்:  10 பேர் மீது வழக்கு
x

தேனி அருகே மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து 2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி அருகே உள்ள தர்மாபுரியை சேர்ந்த பாண்டியன் மகள் கவிதாதேவி (வயது 26). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சந்தோஷ்குமாருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. மாரிமுத்து முன்னாள் ராணுவ வீரர். சந்தோஷ்குமார் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில், கவிதாதேவி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், "எனக்கும், எனது தாய்மாமாவான சந்தோஷ்குமாருக்கும் திருமணம் நடந்தது. திருமணமான 6-வது மாதத்தில் இருந்து என்னை எனது கணவர் அடித்து துன்புறுத்தினார்.

எனது பெற்றோரிடம் ரூ.1 லட்சம் வாங்கி வருமாறு துன்புறுத்தினார். பிரசவத்துக்காக நான் எனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டு, 6 மாதம் கழித்து கணவர் வீட்டுக்கு வந்தபோது, எனது பெரியப்பா சூரியலிங்கம் மகளான சினேகாவை எனது கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

எனவே இதுகுறித்தும், 2-வது திருமணம் செய்து வைத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் அவருடைய கணவர் சந்தோஷ்குமார், மாமனார் மாரிமுத்து, மாமியார் சுருளியம்மாள், பெரியப்பா சூரியலிங்கம், பெரியம்மா இந்திரா, சினேகா மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த ஊர்க்காவல் படைவீரர் பிரேம்குமார் உள்பட 10 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story