தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
x

கோப்பு படம் (பிடிஐ)

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்ட நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும். ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வெப்ப அலை வீசக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் இருக்கும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Next Story