போடியில் 1 மணி நேரம் பலத்த மழை

போடியில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
போடி மற்றும் அதனை சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாமல் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மலைப் பகுதிகளான குரங்கணி, பிச்சாங்கரை, மேலப்பரவு, சிறைக்காடு, மரிமூர் ஆகிய இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலையிலும் மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை பலத்த மழையாக மாறியது. சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





