உடையார்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை


உடையார்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
x

உடையார்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடந்த ஒருவார காலமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து மாலை குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. பின்னர் கருமேகம் சூழ்ந்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை உடையார்பாளையம், கழுமங்கலம், முனியத்திரையான்பட்டி, தத்தனூர், மனகெதி, வெண்மான்கொண்டான், விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, கச்சிப்பெருமாள், துலாரங்குறிச்சி, சூரியமணல், இடையார், நடுவலூர், காடுவெட்டாங்குறிச்சி, பருக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story