ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை: தூவானம் அணையில் உபரிநீர் திறப்பு: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு


ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை:  தூவானம் அணையில் உபரிநீர் திறப்பு:  சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
x

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தூவானம் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி

சின்னமனூர் அருகே மேகமலை வன உயிரிகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள தேயிலை தோட்டங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்களை கொண்ட இந்த பகுதி சிறந்த சுற்றுலா தலமாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள 5 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

இதன் காரணமான தூவானம் மற்றும் இரவங்கலாறு அணைகளில் இருந்து உபரிநீரை திறக்க மின்சாரத்துறை முடிவு செய்தது. அதன்படி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரால் ஆறுகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தூவானம் அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்கிடையே அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story