மாநகரில் கடும் பனிப்பொழிவு


மாநகரில் கடும் பனிப்பொழிவு
x

மாநகரில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

திருச்சி

பொதுவாக மார்கழி மாதம் தான் கடும் குளிர் அனைவரையும் வாட்டி வதைக்கும். தற்போது தை மாதம் முடிந்து மாசி மாதம் பிறந்துவிட்டது. இருப்பினும் திருச்சி மாநகரில் முன் எப்போதும் இல்லாத வகையில் நள்ளிரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இது காலை 7 மணிக்கு மேலும் நீடிக்கிறது. கடும் பனிப்பொழிவால், இரவு நேரம் வேலை முடிந்து செல்பவர்களும், அதிகாலையில் வேலைக்கு செல்பவர்களும் மிகவும் அவதி அடைந்தனர். காலையில் விடிந்த பின்பும் கடும் பனிமூட்டம் இருந்ததால் சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் அனைத்தும் காலையிலும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றதை காண முடிந்தது.


Next Story