திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தானத்திற்குள் புகுந்த குரங்குகள் கூட்டம் - பூஜைகள் தற்காலிக நிறுத்தம்


திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தானத்திற்குள் புகுந்த குரங்குகள் கூட்டம் - பூஜைகள் தற்காலிக நிறுத்தம்
x

திருத்தணி கோவில் மலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படும் குரங்குகள், பக்தர்களை அச்சுறுத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் மூலஸ்தானத்திற்குள் திடிரென குரங்குகள் கூட்டமாக நுழைந்தன. இதனால் அங்கிருந்த பக்தர்கள் சிலர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அந்த குரங்குகள் கோவில் வளாகத்திற்குள் சுற்றி வந்தபடி இருந்தன.

குரங்குகளை வெளியே விரட்ட கோவில் ஊழியர்கள் போராடி வரும் நிலையில், பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருத்தணி கோவில் மலைப் பகுதிகளில் அதிகமாக காணப்படும் குரங்குகள், பக்தர்களை அச்சுறுத்தி வருவது தொடர்கதையாகி இருப்பதாகவும், குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.



Next Story