ஹே சந்திரயான்..! நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற - கவிஞர் வைரமுத்து டுவீட்


ஹே சந்திரயான்..! நிலவில் நீ மடியேறு; நாளை நாங்கள் குடியேற - கவிஞர் வைரமுத்து டுவீட்
x

லூனா நொறுங்கியது ரஷியாவின் தோல்வியல்ல, விஞ்ஞானத் தோல்வி என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

சென்னை,

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' நாளை (புதன்கிழமை) நிலவில் தரையிறங்க உள்ள நிலையில் இதை நேரலையாக ஒளிபரப்பும் அறிவிப்பை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"நேரம் நெருங்க நெருங்க மூளைக்குள் வட்டமடிக்கிறது சந்திரயான். நிலவில் அது மெல்லிறக்கம் கொள்ளும்வரை நல்லுறக்கம் கொள்ளோம். லூனா நொறுங்கியது ரஷ்யாவின் தோல்வியல்ல; விஞ்ஞானத் தோல்வி. சந்திரயான் வெற்றியுறின் அது இந்திய வெற்றியல்ல; மானுட வெற்றி. ஹே சந்திரயான்! நிலவில் நீ மடியேறு நாளை நாங்கள் குடியேற" என்று தெரிவித்துள்ளார்.


Next Story