முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிரான தேர்தல் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவு


முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு எதிரான  தேர்தல் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்து ஐகோர்ட்டு உத்தரவு
x

இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். வழக்கின் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபைக்கு கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 ஓட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெற்றிப் பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தொகுதி முழுவதும் சுமார் 60 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்தும், இருவேறு சமூக மக்களிடையே விரோதத்தை தூண்டி விட்டும், பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை வினியோகம் செய்தும் ஓ.எஸ்.மணியன் வெற்றிப்பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்ல வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சுமார் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்று பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளார். அதிகார துஷ்பிரயோகம் மூலம் வேதாரண்யம் நகராட்சி ஆணையர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட அரசு அதிகாரிகளை தனது தேர்தல் முகவர்கள் போல பயன்படுத்தியுள்ளார்'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். வழக்கின் அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story