ஆவின் பாலகத்துக்கு நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ்

ஆவின் பாலகத்துக்கு நெடுஞ்சாலைத்துறை நோட்டீஸ்
ஆனைமலை
ஆனைமலை முக்கோணம் பகுதியில் சேத்துமடை-பொள்ளாச்சி சாலையில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதியின்றி சாலையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த பாலகத்துக்கு, நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். அந்த நோட்டீசில், சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள ஆவின் பாலகத்தை தாங்களாகவே முன்வந்து 7 நாட்களுக்குள் அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நெடுஞ்சாலைத்துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்படும். மேலும் அதற்கு உரிய தொகையும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





