3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கல்


3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கல்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் பதுக்கல் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் சாராயம் காய்ச்சுவதையும், காய்ச்சி கடத்தி செல்வதையும் தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வாரம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் மர்ம நபர்கள் சாராய ஊறல் பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரியாலூர் போலீசார் வாரம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள நீரோடையின் ஓரம் உள்ள புதருக்கு இடையே 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 15 பேரல்களில் பதுக்கி வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story