நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு


நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும்   விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Dec 2023 10:51 AM GMT (Updated: 20 Dec 2023 11:24 AM GMT)

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

நெல்லை,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியது. இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, நெல்லை , தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. தற்போது வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் மக்கள் பாதிப்புகளில் இருந்து மீளவில்லை.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் நெல்லை மாவட்டத்தில் முகாம்கள் ஏதும் நடைபெறாத கல்லூரிகள் நாளை செயல்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story