புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி


புனித லூர்து அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் நகரில் உள்ள பழமை வாய்ந்த புனித லூர்து அன்னை ஆலயத்தில் 10 நாள் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி சிறிய தேரில் மாதா ஊர்வலம் நடந்தது. நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருந்தேர்விழா நடந்தது. வாகனத்தில் வண்ண மலர்களால் புனித லூர்து அன்னை சொரூபம் அலங்கரிக்கப்பட்டு தேர் பவனி புறப்பட்டது. மேல அக்ரஹாரம் சத்திரம், ஆஸ்பத்திரி ரோடு, பென்னி ஹவுஸ் தெரு, பட்டு நூல் கார தெரு, சின்ன கடைத்தெரு, வெள்ளாளர் தெரு, தேரடி வழியாக மாதா ஊர்வலம் சென்று மீண்டும் கோவிலை அடைந்தது. வழியெங்கும் பக்தர்கள், பொதுமக்கள் மாதாவின் மீது வண்ண மலர்களை தூவி வழிபட்டனர். இதில் பங்குத்தந்தைகள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story