அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கரூர்

தி.மு.க.

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அண்ணாவின் புகழ் ஓங்குக.. என வாழ்த்து கோஷங்களை தி.மு.க.வினர் எழுப்பினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள். இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், மாநகர செயலாளர்கள் எஸ்.பி.கனகராஜ், சுப்பிரமணியன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

இதேபோல் கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அண்ணாவின் புகழ் ஓங்குக.. என வாழ்த்து கோஷங்களை அ.தி.மு.க.வினர் எழுப்பினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பாலமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.சி.கே.பாலகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் வி.சி.கே.ஜெயராஜ், சேரன் பழனிச்சாமி, சக்திவேல், தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் கலையரசன், விநாயகம், நகர செயலாளர்கள் கே.சி.எஸ்.விவேகானந்தன் உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story