வீடு புகுந்து நகை திருட்டு


வீடு புகுந்து நகை திருட்டு
x

திண்டுக்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே என்.எஸ்.நகர் போஸ்டல் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). மில் தொழிலாளி. இவர், தனது தாய் முத்துலட்சுமியுடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாததால் முத்துலட்சுமி, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மணிகண்டன் தனது தாய்க்கு உதவியாக மருத்துவமனையில் இருந்தார். இதனால் அவரது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டுக்குள் புகுந்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகையை திருடி சென்றனர். இதற்கிடையே நேற்று வீட்டிற்கு வந்த மணிகண்டன், நகை திருடுபோனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story