வீட்டில் புகுந்து 1½ பவுன் சங்கிலி திருட்டு

மணல்மேடு அருகே வீட்டில் புகுந்து 1½ பவுன் சங்கிலி திருட்டு
மணல்மேடு:
மணல்மேடு அருகே புரசங்காடு காலனி தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் காலை செல்வராஜ் எழுந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் வைத்திருந்த 1½ பவுன் சங்கிலி, வெள்ளி கொலுசு, செல்போன் ஆகியவற்றை மர்மநபர்கள் வீட்டில் புகுந்து திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





