வீடுகளை மழைநீர் சூழ்ந்தது


வீடுகளை மழைநீர் சூழ்ந்தது
x

வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள துறைமங்கலம் ஏரிக்கு நீர்வரத்து ஓடையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால், அப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பின்னர் பொதுமக்கள் அந்த ஓடையில் அடைப்பை சரி செய்ததையடுத்து மழைநீர் வடிந்தது. மேலும் பெரம்பலூர்-எளம்பலூர் சாலையின் கிழக்குப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், ரோஸ்நகர், ரெங்காநகர் ஆகிய பகுதியில் இருந்து மழைநீர் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் அதிகரித்து பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ரோவர் சாலையில் வெள்ளந்தாங்கியம்மன் ஏரிக்கு செல்லும் மழைநீர் வடிகால் வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக சென்ற மழைநீர் சாலையில் புகுந்தது. இதனால் அந்த வழியாக கார்கள், மோட்டார் சைக்கிள்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் மெதுவாக அப்பகுதியை கடந்து சென்றனர்.


Next Story